Wednesday 30 April 2014

BENEFIT OF PRAYERS OR PUJA

Mataji Sarojini Ammaiyaar has mentioned on many occasions how the wishes of devotees who came to Kallar ashram had been fulfilled. Agathiyar has fulfilled our wishes too. Agathiyar also asks that we pray. He extols the power of prayers in the following Nadi revelation on 12.7.2010.


பூசையின் பலன்

நிகண்டு நாடியில் இருந்து அகத்திய மா முனிவர் அருளிய ஆசி சுக்கமம் 12.7.2010

உண்மையும் உத்தமமும் நிறைந்த பூசை
நிறைந்த இன்பம் தந்திடுமே  மகத்துவப் பூசை
நிதானமானதொரு  அற்புத பூசை 
அறமுடனே அகிலம்  காக்கும் பூசை 
அருளான  மாந்தரோடு செய்வாய் நன்றாய்

நன்றன புண்ணியங்கள் காக்கும் பூசை 
நற்கதியும் பலர் அடைய செய்யும் பூசை 
எண்ணாத சக்தி எல்லாம் தந்திடும் பூசை  
எகாந்த  நிலை அடைய வைக்கும் பூசை   

வையகத்தின் மாந்தரின் அகத்தின் ஜோதி 
வலமாக்கும் முழுமதி பூசை அப்பா 
ஐயத்தை நீக்கிடும் பூசைதானே 
ஆண்டவனை அடைய செய்யும் வழியும் இதுவே 

வழி வகுக்கும் சேய்க்கும் மாந்தற்கும் தான் 
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும் 
அழியாத மார்கத்தில் இருந்த வண்ணம் 
அகிலத்தில்  நிலை பெற்று வாழ் வழிக்கும் பூசை 

பூசையால் புண்ணியங்கள் கிட்டும்  பூசை 
பூர்வமும்  போக்கிடும் பூசை அப்பா 
இசையுடனே குடும்பவளம் தந்திடும் பூசை 
எவை எல்லாம் வேண்டினும் தந்திடும் பூசை 

தந்திடுமே தர்மம் தவ சிந்தை 
தரித்திரியம் போக்கும் பூசை யாகும் 
அந்தமும் ஆதியும் இல்லா 
அகிலமதில் உயர்வு தரும் பூசை அப்பா 

அப்பனே ஆண்டவனே உருகும் பூசை 
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூசை 
ஒப்பில்லா மகத்துவம் கொண்ட பூசை 
உயர்வோடு  நீ எடுத்து செய்வாய் அப்பா

ஒப்பில்லா மாற்றங்கள் மகத்துவமும்
உயர் நிலை பூசையாலே இருக்குதப்பா 

Listen to Agathiyar's revelation of the benefits of performing/ conduction prayers or puja (pusai) as read out by Nadi Guru Ramesh.