Wednesday 8 February 2017

SACRED REVELATIONS 3 - ON THE IMPERMANENCE OF LIFE

Is all that is seen a mirage? In this post Aasan TR brings us a wonderful song of Bharathiya "Ulagathai Nokki Vinavuthal" that states the impermanence state of all things on the face of this earth.



நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் 
தோன்றுவதோர் விதையிலென்றால் 
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே 
நித்தம் விதி தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் 
காண்பதெல்லாம் உறுதியில்லை 
காண்பது சத்தியாம்  
இந்த காட்சி நித்தியமாம்